சில
நேரங்களில் வாழ்க்கை நம்மை எப்பாதையில் இட்டுச் செல்கின்றது என்பதே
தெரியாமல் அதன் போக்கிற்கு நாம் கட்டுப்பட்டு நடக்கின்றோம். ஆனால்,
எம்மனிதன் தன் வாழ்க்கையின் துயரங்களை மட்டுமே எண்ணி பார்த்து வருத்தம்
கொள்கின்றானோ, அவனே வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தவன் ஆகின்றான். பல
வேளைகளில் அவனை விட ஆழ்ந்த சங்கடத்தில் உள்ளவர்களும் இருக்கின்றனர் என்பதை
அவன் நினைத்து பார்ப்பதே இல்லை. "உனக்கும் கீழே உள்ளவர் கோடி,
நினைத்து பார்த்து நிம்மதி நாடு" என்ற பாடலின் வரிகள் சத்தியத்தை
சுமக்கின்றன. எனக்கு தலைவலிக்கின்றது. நானே பெரும் துரதிர்ஷ்டசாலி என
நினைப்பவன், அதே நொடியில் மற்றொருவன் மூளை புற்றுநோயால் அவதியுறுவதை
நினைக்க மறந்து போகின்றான்; மறுத்தும் விடுகின்றான். இருப்பதை வைத்து
மகிழ்ச்சியுற கற்கும் வரையில் அனைத்துமே நமக்கு சாபமாய் தான் தோன்றும்.
கடவுளின் கருணையால் இருப்பதை வைத்து மன நிறைவு பெறுவோம்!!
No comments:
Post a Comment